எடிட்டர் எஸ்.ஏ.பி பற்றி அறிந்த தகவல்கள் குறைவாகவும், அறியாத தகவல்கள் மிக அதிகமாகவும் இருந்தன.குமுதம் வார இதழை நிறுவி அதை இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக மாற்றிய எடிட்டர் எஸ்.ஏ.பி அண்ணாமலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஆர்கே செண்டரில் நடந்தது. எடிட்டர் எஸ்.ஏ.பி. குறித்து மூத்த பத்திரிகையாளர் மாலன் உரையாற்றினார்.